Samstag, 3. Mai 2014

காமாட்சி எங்கள் காமாட்சி

காமாட்சி எங்கள் காமாட்சி
கருணயின் வடிவான மனங்களில்
அவள் ஆட்சி!




காமாட்சி எங்கள் காமாட்சி
கருணயின் வடிவான மனங்களில் அவள் ஆட்சி!
காமாட்சி எங்கள் காமாட்சி!

விதியேதும் வெல்லாது வினையென்று சொல்லாது
கதியேதும் இல்லாது கணநேரம்நில்லாது
அலைகடல் துரும்பென அவனியில் தினம் தினம்
அலைந்திடும் நமதுளம் மகிழ்ந்திட  துயர்கெட
கம் நகர் வந்தமர்ந்தாள் காமாட்சி!
காமாட்சி எங்கள் காமாட்சி!

இவள்முகம் பாராது இடரேதும் தீராது
இணையடி சேராது இன்பங்கள் வாராது
ஒரு தினம் ஒரு பொழு  திவள்பதம் பணிந்திட
உருகிடும் நமதுளம் அமைதியில் நிலைபெற
கம் நகர் வந்தமர்ந்தாள் காமாட்சி
காமாட்சி எங்கள் காமாட்சி

சங்கரன் துணையாகி சர்வமும் தனதாகி
இங்கொரு நிலையாகி இன்னருள் மழையாகி
தன்னிரு பதமலர் எண்ணிடும் அடியவர்
இன்னலைத் துடைத்திட இன்பங்கள் வழங்கிட
கம் நகர் வந்தமர்ந்தாள் காமாட்சி
காமாட்சி எங்கள் காமாட்சி








ஜெர்மனி - ஹம் நகரில்
கோயில் கொண்டெழுந்தருளும்
அன்னை ஸ்ரீ காமாட்சியை நினைந்து
பல வருடங்களுக்கு முன்பு
அடியேன் வரைந்த பாடல் இது.



சில வருடங்களுக்குமுன்பு வெளியான
ஹம் காமாட்சி அம்பாள் பக்திப்பாமாலை
இசைப்பேழையில்
இன்னிசைக்குரலோன்
திரு சு.நடராஜா அவர்கள்
இசையமைத்துப் பாடியிருந்தார்.

பூமுகங்களுக்காக
இதனையும்
காணொளி வடிவமாக்கித் தருகிறேன்.


-இந்துமகேஷ்

Keine Kommentare: