Sonntag, 22. Mai 2011

பூமுகங்கள்- உங்கள் பார்வையில்...

பூமுகங்கள் பற்றி...
மின்னஞசல் வழி...




பூவரசின் உயிரோட்டமுள்ள
ஆவணங்கள்.
முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
மு.க.சு.சிவகுமாரன்
வெற்றிமணி-சிவத்தமிழ்
யேர்மனி.
18.05.2011




வீட்டுக்குப் போகவிடு பற்றி...

அன்பு மகேஷ்!
வணக்க்ம்.
அன்றே இததுணை நன்றாய்க் குழந்தைகளை வைத்து
ஒரு உண்மை சார்ந்த கற்பனை ஆதங்கத்தை
விலங்குகளின் சார்பாக மனிதரைச் சாடி எழுதி
ஜமாய்த்திருககிறீர்கள்
ஒளியமைப்பில் இன்னும் அதிக வண்ணங்கள் கலந்திருக்கலாம்.
குழந்தைகள் கடுமையாக உழைத்திருப்பது தெரிவதிலிருந்து
வளர்ந்தவர்களின் உழைப்பின் கடுமையை உணர முடிகின்றது.
முயல்களின் இடைவிடாத் துள்ளலை நான் மிக மிக இரசித்தேன்.
கரும்பாய் இனித்த மழலைகளின் கலையாட்டம்.

தொடருங்கள்.
காத்திருக்கிறேன்.

எழிலன்
யேர்மனி
17.05.2011



வணக்கம் அண்ணா!
எப்படி சுகங்கள்?
பூமுகங்களில் அகலம் குறைவாக உள்ளது.
அதனால் வீடியோக்கள் எழுத்துகளுடன்
செருகி காணப்படுகின்றன என நினைக்கிறேன்.
நன்றி.

அன்புடன்,
இராஜன்.
யேர்மனி
17.05.2011




( தங்கள் மடல் கிடைத்ததும் உடனே மாற்றிவிட்டேன்.
இப்போதுள்ளது தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கருத்துக்களுக்கு நன்றி!
தொடர்வோம்.

அன்புடன்
உங்கள்
இந்துமகேஷ்.

Keine Kommentare: