Freitag, 8. Juli 2011

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட



முருகனை நினைந்து மனம் கரைந்து
நான் வரைந்த பாடல்களில் ஒன்று இது.


பாடலைப் பாடியிருப்பவர்-
க.பாலசுப்பிரமணியம்


இசைதந்த கலைஞர்கள்
சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா
பேபி ஜோன்சன்
பத்மசிறீ



பூவரசு விழா மேடைகளை மெல்லிசைப்
பாடல்களால் அலங்கரிக்க வேண்டும் என்ற
எனது விருப்பத்தின் ஆரம்ப முயற்சியாக
பூவரசு 2வது ஆண்டு நிறைவு
கலை இலக்கிய பரிசளிப்பு விழா 1993 இன்
மேடையில் ஒலித்த
இந்தப் பாடலை
பூமுகங்களுக்காக
காணொளி வடிவாக்கியிருக்கிறேன்.

-இந்துமகேஷ்

Donnerstag, 7. Juli 2011

புதியதோர் உலகம் செய்வோம்!


புதியதோர் உலகம் செய்வோம்




நாடகங்களில் கவிதை நாடகம் என்று ஒரு வகை.

வசனங்கள் யாவும் கவிதைகளாய் வெளிப்படும்.


ஆனால் இது அத்தகைய கவிதை நாடகம் அல்ல.

இது எனது கவிதை ஒன்றின் நாடக வடிவம்.

பூவரசு 12வது ஆண்டு நிறைவு விழா 2003இல்
அரங்கேறியது.

எனது கற்பனைக்கு உயிரூட்டிய இளங்கலைஞர்கள்-
நிக்சன் - அருணோதயன் - சுதன்- அரவிந்தன் -தீபகன்


ந்டனப் பயிற்சி- பிரதீபா.

poovarasu kultur und Literatur Fest 2003 in Bremen, Germany..

பூமுகங்களுக்காக காணொளி வடிவாக்கித் தருகிறேன்.
-இந்துமகேஷ்.

மனிதர்களே!


அன்புகொண்ட மனிதருக்கு
அனைத்துயிரும் ஒன்றாம்
அன்பில்லாத மனிதரிலும்
விலங்குகளே நன்றாம்.



மழலையர் நடனத்தில்
உருவகக் கதை சொல்லும் உத்தியைக்
கையாளும் முயற்சியாக
எழுதப்பட்ட எனது பாடலுக்கு
பிரியங்கா -அஸ்வினி என்னும் இரு
மழலைகளும் உயிரூட்டியிருக்கிறார்கள்.

1996இல் பூவரசின் 5வது ஆண்டு நிறைவு விழாவில்
இடம்பெற்ற மழலையர் உருவக நடனத்தை
பூமுகங்களுக்காக காட்சிப்படுத்தியிருக்கிறேன்.



அன்புடன்
-இந்துமகேஷ்