Donnerstag, 7. Juli 2011

மனிதர்களே!


அன்புகொண்ட மனிதருக்கு
அனைத்துயிரும் ஒன்றாம்
அன்பில்லாத மனிதரிலும்
விலங்குகளே நன்றாம்.



மழலையர் நடனத்தில்
உருவகக் கதை சொல்லும் உத்தியைக்
கையாளும் முயற்சியாக
எழுதப்பட்ட எனது பாடலுக்கு
பிரியங்கா -அஸ்வினி என்னும் இரு
மழலைகளும் உயிரூட்டியிருக்கிறார்கள்.

1996இல் பூவரசின் 5வது ஆண்டு நிறைவு விழாவில்
இடம்பெற்ற மழலையர் உருவக நடனத்தை
பூமுகங்களுக்காக காட்சிப்படுத்தியிருக்கிறேன்.



அன்புடன்
-இந்துமகேஷ்

Keine Kommentare: